
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பிடாரி குளத்தை சேர்ந்தவர் சுரேஷ்(30). இவர் கட்டுமான ஒப்பந்ததாரர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் வர்ஷா(27) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் வர்ஷாவுக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் 7 மாதத்திலேயே குறை பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அதன் பிறகு வர்ஷா அடிக்கடி தனது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் வர்ஷா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வர்ஷாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.