முதலமைச்சர் ஸ்டாலின் விவசாயிகளின் நலனுக்காக பல திட்டங்களை அமல்படுத்தி உள்ளார். அந்த வகையில் தற்போது விவசாயிகளின் நலன் கருதி நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் தமிழக அரசு ஊக்க தொகையை சேர்த்து வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த புதிய ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்க தொகை இரண்டும் சேர்ந்து செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சாதாரண நெல் குவிண்டால்  ஒன்றுக்கு 82 ரூபாய், சன்னகர நெல் குவிண்டால் ஒன்றுக்கு 17 கூடுதல் ஊக்கத்தொகையாக பெற்றுக்கொள்ளலாம். மேலும் சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2265, சன்னகர நெல்  குவிண்டால் ஒன்றுக்கு 2310 எனவும் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்விற்கும் விவசாயிகளுக்கு வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.