
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படும். வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படும் நிலையில் கடந்த வருடத்தில் மார்ச் மாதம் 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக தற்போது 53 சதவீத அகவிலை படியை ஊழியர்கள் பெற்று வருகிறார்கள். இந்நிலையில் இந்த வருடம் பிப்ரவரி மாத இறுதிக்குள் அகவிலைப்படியை உயர்த்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதாவது பிப்ரவரி 26 ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் அந்தக் கூட்டத்தின் போது அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதன்படி 3 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளது. மேலும் இதனால் ஊழியர்கள் மொத்தமாக 56 சதவீத அகவிலை படியை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.