
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் 50 சதவீதம் வரை அகவிலைப்படி பெற்று வருகிறார்கள். இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலை படியை 3 சதவீதம் வரை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. அகவிலைப்படி என்பது ஆண்டுக்கு இருமுறை நாட்டின் விலைவாசி உயர்வை சமாளிக்கும் விதமாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் தொகையாகும்.
இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 2024 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். கடந்த வருடமும் இதே காலத்தில் அகவிலை படியானது 4 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது தீபாவளி பண்டிகையில் ஊழியர்களை குஷிப்படுத்தும் விதமாக மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் 49 லட்சம் அரசு ஊழியர்களும், 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள்.