இந்திய தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது 18 வயதுக்கு மேற்பட்டோர் கண்டிப்பாக ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதால் வாக்காளர் அடையாள அட்டை பெறுவது அவசியம்.

வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் நிலையில் புதிய அட்டையை விண்ணப்பிக்க ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு இதை 15 நாட்களுக்குள் வாக்காளர் அட்டையை வழங்கும்படி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக ஒரு புதிய இணையதளத்தில் தகவல் தொழில்நுட்ப செயலி ஒன்றினை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வாக்காளர் அட்டை உருவாக்கப்பட்டதிலிருந்து தபால் துறை மூலமாக வாக்காளர்களிடம் ஒப்படைக்கும் வரையில் ஒவ்வொரு கட்டம் தொடர்பாகவும் வாக்காளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

மேலும் வாக்காளர் அட்டையை அவர்கள் கையில் பெரும் வரையில் அது எந்த நிலையில் இருக்கிறது என்ற தகவலை குறுஞ்செய்தியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்ப இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.