சமூக ஊடகங்களில் ஒரு உணர்ச்சிவசப்படுத்தும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவில், பள்ளி முடிந்த பின் ஒரு தாத்தா தனது பேத்தியை சைக்கிளில் அழைத்துச் செல்லும் காட்சியும், வெயிலிலிருந்து தாத்தாவை காப்பாற்ற அந்த சிறுமி தனது குடையை நீட்டி இருவரையும் நிழலில் வைத்துக் கொள்கின்ற காட்சி காண்போரை கண்கலங்க செய்கிறது

 

View this post on Instagram

 

A post shared by Imran Shah (@imranshah__official)

இந்தக் காணொளி நெஞ்சை நெகிழ வைக்கும் வகையில் இருந்ததால், பலரும் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து வருகிறார்கள். தாதா தனது பேத்தியை வீட்டுக்குச் செல்ல சைக்கிளில் அழைத்துச் செல்லும்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது சிறுமி தனது தாத்தாவை இறுக்கமாக பிடித்து அவருக்கும் சேர்த்து குடை பிடித்துள்ளார்.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் @imranshah__official பகிர்ந்துள்ளார். இதற்கு தற்போது வரை 1 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளன. ‘தாத்தா-பேத்தி அன்பு என்பது விலைமதிப்பற்றது’, ‘குடும்பத்தில் அன்பும் அக்கறையும் இவ்வாறு இருப்பது பெரும் வரம்’,

‘கல்விக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் குடும்பங்கள் தான் நாட்டின் நம்பிக்கை’ என சமூக ஊடகங்களில் மக்கள் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.