
கேரள மாநிலம் பாலக்கோடு மாவட்டத்தில் யூசுப் அலி (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜோதிடர். இவர் அரபி ஜோதிடம் மூலமாக குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் மற்றும் பிரச்சினைகள் போன்றவற்றை சரி செய்வதாக கூறியுள்ளார். குறிப்பாக பெண்களை குறி வைத்து பிரச்சனைகளை சரி செய்வதாக கூறி அவர்களை ஜோதிட நிலையத்திற்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
அதாவது குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதாக பெண் ஒருவரை ஜோதிட நிலையத்திற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதே பெண்ணை கடந்த 22ஆம் தேதி மீண்டும் வரவழைத்து அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது.
அதாவது இதேபோன்று குடும்பப் பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி பல பெண்களை சீரழித்துள்ளார். கடந்த வருடம் ஒரு பெண்ணை தாழ்வு மனப்பான்மையை சரி செய்வதாக கூறி வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மற்றொரு பெண்ணை கையில் இருக்கும் விஷத்தை நீக்குவதாக கூறி வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவரிடமிருந்து 8 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒன்றரை லட்சம் பணத்தை பறித்துள்ளார்.
இதேபோன்று பல பெண்களை குடும்ப பிரச்சினைகளை சரி செய்கிறேன் ஜோதிடம் பார்க்கிறேன் என்று கூறி வரவழைத்து முதலில் கையில் ஏதோ ஒரு திரவத்தை ஊற்றியுள்ளார். அதை நுகர்ந்து பார்த்ததும் பெண்கள் மயக்கமடைய பின்னர் அதனை பயன்படுத்தி அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் தலைமறைவாக இருந்த யூசுப் அலியை தற்போது போலீசார் கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.