
காவிரி கரையோரங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்கு தமிழக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையின் முழு கொள்ளளவையும் எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அணையில் இருந்து 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது.
இதனால் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஹராங்கி மற்றும் ஹேமாவதி அணைகளில் நீர் திறக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக காவிரியில் கடந்த 10 நாட்களாக பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.