
நான் காந்தியின் வழியை பின்பற்றுவது கிடையாது, நான் நேதாஜி வழியைத்தான் பின்பற்றுவேன் என நடிகை ரஞ்சனா நாச்சியார் தெரிவித்துள்ளார். பேருந்தில் சென்ற மாணவர்களை தாக்கியதாக கைது செய்யப்பட்ட சினிமா துணை நடிகை ரஞ்சனா நாச்சியார் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, பேசிய அவர், பேருந்தில் மாணவர்கள் தொங்கி செல்வதை பலரும் பார்க்கிறார்கள்.
ஆனால் எதுவும் சொல்வதில்லை. நான் அவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவ்வாறு நடந்தேன். எங்கள் குடும்பம் காந்தி வழியை பின்பற்றுவதில்லை, நேதாஜியின் வழியை பின்பற்றுகிறோம் என தெரிவித்துள்ளார்.