
சென்னை மாவட்டம் நங்கநல்லூர் பகுதியில் ரிஷி ஜோதி குமார் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் நீலாங்கரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் டெக்னீசியனாக பணிபுரிந்து வரும் நிலையில் ஒரு ஸ்கேன் மையத்தில் பணிபுரிந்து வந்த 29 வயது பெண்ணுடன் பழகி வந்தார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இளம்பெண்ணை ரிஷி திருமணம் செய்து கொள்வதாக கூறி தன் வீட்டிற்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இவர்கள் இருவரும் பலமுறை தனிமையில் உல்லாசமாக இருந்ததால் இளம்பெண் கர்ப்பமாகவே பின்னர் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு கருவை கலைத்தார். அதன் பிறகு அந்த இளம் பெண்ணுடன் பேசுவதை வாலிபர் தவிர்த்து வந்த நிலையில் அந்தப் பெண் வாலிபரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் ரிஷி அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த நிலையில் வேறொரு பெண்ணை திருமணமும் செய்து கொண்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் பரங்கி மலையில் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தன்னுடன் உல்லாசமாக இருந்துவிட்டு பின்னர் திருமணத்திற்கு மறுத்து வேறொரு பெண்ணை திருமணம் செய்து விட்டதாக வாலிபர் மீது அந்த பெண் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்த ரிஷியை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.