மூன்று மாதங்களாக இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நீடித்து வருகிறது. இஸ்ரேலின் தரைப்படை காசாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் முன்னேறி வருகின்றனர். இந்நிலையில் காசாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அல்-அமல் மருத்துவமனை மீது இஸ்ரேல் தரைப்படை தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

பீரங்கிகளுடன் மருத்துவமனையை சுற்றி வளைத்து வீரர்கள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஏராளமானோர் படுகாயம் அடைந்ததாக பாலஸ்தீன செஞ்சிலுவை சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.