ஹரியானா மாநிலம் டோப் கிராமத்தைச் சேர்ந்த மகன் என்பவர், தனது வயலில் ஜூன் 18 அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அவரது மரணத்துக்கு காரணம், அவரது மனைவி திவ்யா மற்றும் அவரது காதலர் தீபக் எனக் குற்றம் சாட்டியுள்ளார். மரணத்திற்கு முன், மகன் 4 நிமிடங்கள் 2 வினாடிகள் கொண்ட ஒரு வீடியோ பதிவு செய்திருந்தார். அதில், திவ்யா மற்றும் தீபக் இணைந்து, பணம் கேட்டதோடு, ஆபாச வீடியோ ஒன்றையும் அவருக்கு அனுப்பியதாகக் கூறியுள்ளார். அந்த வீடியோவில் திவ்யா தனது காதலருடன் ஹோட்டலில் ஆடும் ஆபாச நடனம் பதிவாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மகன் வெளியிட்ட வீடியோவில், தனது மனைவியின் காதலன் தீபக்கின் பதவி உயர்வுக்கு ₹5 லட்சம் ரூபாய் கேட்டதாகவும், அதற்காக தன்னிடம் உள்ள நிலமும் நகைகளும் விற்று அந்த தொகையை முதலில் திவ்யாவின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியதாகவும் கூறியுள்ளார். மறுநாளே அந்த பணம் தீபக்கின் கணக்குக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். அதேபோல், திவ்யா மற்றும் தீபக் தனது பெற்றோர்களைக் கொன்று, நிலங்களை விற்று மும்பைக்கு சென்று புதிய நிலம் வாங்க திட்டமிட்டதாகவும் பரபரப்பாகக் கூறியுள்ளார்.

மகன் வெளியிட்ட வீடியோவில், திவ்யா ஏற்கனவே திருமணமாகியவர் எனவும், இந்த உண்மையை தன்னிடமிருந்து மறைத்ததாகவும் கூறியுள்ளார். இப்போது, திவ்யா தனது காதலருடன் வாழ்ந்து வருகிறார் என்றும் கூறுகிறார். மேலும், தன்னுடைய மரணத்திற்கு பிறகு, தனது குழந்தைகள் பெற்றோருடன் தங்க அனுமதிக்க வேண்டும் என்றே கடைசியாக வலியுறுத்தியுள்ளார். தற்போது மகாராஷ்டிரா காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் தீபக் மீது மற்றும் திவ்யாவிடம் விசாரணை நடத்த வலியுறுத்தப்படுகிறது.

மேலும் இது போன்ற சம்பவங்கள் சமூகத்தின் சீரழிவை காட்டும் என்பதோடு, நேர்மையான விசாரணை மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.