தமிழகத்தில் திமுக அமைச்சர்கள் தொடர்ந்து சர்ச்சையாக பேசி அடிக்கடி மாட்டிக் கொண்டு முழிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவ்வகையில் தற்போது திமுக அமைச்சர் ஒருவர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது தற்போது சர்ச்சையில் சிக்கி இருப்பது பால்வளத்துறை அமைச்சர் நாசர் தான். திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்று இருந்த அமைச்சர் நாசர், அமர்வதற்கு சேர் எடுத்து வர கூறி இருக்கிறார். ஆனால் சேர் எடுத்து வர சற்று தாமதமானதால் ஆத்திரமடைந்த அவர் கட்சி நிர்வாகியை கல்லை தூக்கி அடித்து ஆவேசமாக திட்டிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

https://youtu.be/HE–93kMmWM