கணவரின் கொடுமையால் கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்த கொடூர சம்பவம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடந்துள்ளது. கணவன் மற்றும் மனைவி பிங்கி, சுக் தேவ் ஆகியோர் ராஜா பகுதியில் உள்ள புலேட் நங்கல் கிராமத்தில் வசித்து வருகிறார்கள். பிங்கி ஆறு மாத கர்ப்பிணி. அவருடைய வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் வளர்கின்றன.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்ட நிலையில் அதனால் ஆத்திரமடைந்த சுக்தேவ் கர்ப்பிணி மனைவி பிங்கியை கட்டிலில் கட்டி வைத்து தீ வைத்துள்ளார். இதில் பிங்கி பரிதாபமாக தீயில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.