தென்மேற்கு வங்க கடலில் தற்போது பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. பல்வேறு பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில் புயலில் முன்பகுதி கரையை கடக்க தொடங்கியது. அடுத்த 3 மணி நேரத்தில் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..