KPY பிரபலம் பாலா தன்னால் இயன்ற உதவிகளை உதவி தேவைப்படுபவருக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி செய்து வருவதுடன் அதை தனது சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டும் வருகிறார். இவரது செயலுக்கு பலரும் பாராட்டுகளை முதலில் தெரிவித்த வந்த நிலையில், தொடர்ச்சியாக இவர் செய்து வரும் உதவிகள் குறித்து இவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பது குறித்த கேள்விகள் தற்போது சமூக வலைதளத்தில் கேட்கப்பட, அதற்கு தற்போது பாலா பதில் அளித்துள்ளார். அதில் நல்லது செய்வதென்பது இக்காலத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. இவனால் எப்படி இவ்வளவு உதவிகள் செய்ய முடியும் என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது வேதனை அளிக்கிறது.

இவனுக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள். அதனால் தான் இவ்வளவு உதவி செய்கிறான் என்றெல்லாம் பேசுகிறார்கள் ஆம் என் பின்னாடி இருக்கிறார்கள் கஷ்டங்கள், வெட்கம், அடி, வலி இவையெல்லாம் தான் என் பின்னால் இருக்கிறது. மேலும் என்னுடன் தற்போது ராகவா லாரன்ஸ் உதவியாக இருந்து வருகிறார். அதே போல், வேறு ஒருவரின் கருப்பு பணத்தை இவர் ஒயிட் மணியாக மாற்றி வருகிறார் என பலரும் கமெண்ட் செய்து வந்தனர். நான் கருப்பு பணத்தை மாற்றவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தை கொண்டு தான் உதவி செய்து வருகிறேன் என்று தெரிவித்தார். நான் நடித்து வரும் பணத்தை கொண்டும் , இன்ஸ்டாகிராமில் எனக்கு வரும் ப்ரோமோஷன்களுக்கு வரும் பணத்தைக் கொண்டும் மட்டுமே நான் உதவி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.