
மத்திய பிரதேசம் மாநிலம் சிவபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாகீர் கான். மனைவி பர்சானா. சாகீர் கான் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்கு எதிராக போலி வரதட்சணை புகார் அளித்து மிரட்டுவதாகவும், இதனால் மன உளைச்சலில் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியுள்ளார்.
முதலில் சாகீர் கான் விஷம் குடித்துள்ளார். இரண்டாவது முறை கை மணிக்கட்டை அறுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததால் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினார்.
தற்பொழுது பொதுமக்கள் குறைதீர்க்கும் அதிகாரிகளிடம் மனு அளித்த சாகீர் கான், எனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரால் எனது உயிருக்கே ஆபத்து உள்ளது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இல்லை என்றால் என்னை கருணை கொலை செய்ய அரசு அனுமதி கொடுக்க வேண்டும். அவர்கள் என்னை கொன்று டிரம்மில் அடைத்து வைக்கலாம். பாலைவனத்தில் வீசலாம் என்ற பயம் உள்ளது என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.