நாட்டில் செயல்படும் பொதுத்துறை வங்கியான கனரா வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பொதுவாக வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை இருக்க வேண்டும். மினிமம் பேலன்ஸ் இல்லாவிடில் அபராதம் விதிக்கப்படும். இதன் காரணமாக குறைந்த பட்சம் ரூ.500 அல்லது ரூ.1000 இருக்க வேண்டும். ஆனால் இனி மினிமம் பேலன்ஸ் இல்லாவிடிலும் அபராதம் விதிக்கப்பட மாட்டாது என தற்போது கனரா வங்கி அறிவித்துள்ளது.

இந்த புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன்பு கனரா வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாவிடில் 25 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டிய நிலை இருந்த நிலையில் தற்போது இந்த விதிமுறை நீக்கப்பட்டது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.