தமிழ் சினிமாவில் பிரபலமான  நடிகராக இருக்கும் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்த நிலையில், அரவிந்த்சாமி வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் மோகன்ராஜா  இயக்கி இருந்த நிலையில் தனி ஒருவன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் ரசிகர்கள் பலரும் தனி ஒருவன் 2 திரைப்படத்தை இயக்க வேண்டும் என்று ஆர்வத்தோடு கூறிய நிலையில் தனி ஒருவன் 2 கண்டிப்பாக இயக்கப்படும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

ஆனால் அதன் பிறகு இயக்குனர் மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் வேறு படங்களில் கவனம் செலுத்தியதால் தனி ஒருவன் 2 கைவிடப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ஜெயம் ரவி கண்டிப்பாக தனி ஒருவன் 2 இயக்கப்படும் என்று கூறியுள்ளார். அதன் பிறகு தனி ஒருவன் 2 படத்திற்கான கதை தயாராகி விட்டது. பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்பாகவே தனி ஒருவன் 2 திரைப்படத்தை இயக்குவதற்கு திட்டமிட்டோம். ஆனால் நானும் ராஜாவும் வேறு வேலைகளில் பிஸியாகிவிட்டதால் தனி ஒருவன் 2 படத்தை இயக்க முடியவில்லை. ஆனால் கூடிய விரைவில் தனி ஒருவன் 2 திரைப்படத்தின் சூட்டிங் தொடங்கும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த அறிவிப்பு ஜெயம் ரவி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.