சென்னை மாவட்டம் சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முகமது அப்பாஸ்(57). இவர் கறிக்கடை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்பாஸின் வீட்டில் வேலை பார்ப்பதற்காக ஒரு பெண் வந்தார். வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் ஆன பிறகு அப்பாஸுக்கும் அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் அப்பாஸ் அந்த பெண்ணிடம் 6 லட்ச ரூபாய் பணம், 8 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொடுத்துள்ளார். திரும்பி அவற்றைக் கேட்டபோது பெண் தகராறு செய்து விருத்தாசலத்திற்கு வந்தார்.

கடந்த 20ஆம் தேதி அப்பாஸ் விருதாச்சலத்திற்கு சென்று அந்த பெண்ணிடம் நகை மற்றும் பணத்தை கேட்டபோது அந்த பெண் தனது மகன்களுடன் சேர்ந்து அப்பாஸை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அப்பாஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் எனக்கு கணவர் கிடையாது உங்களோடு வாழ்ந்து விடுகிறேன் எனக்கூறி அந்த பெண் என்னை ஏமாற்றி திருமணம் செய்தார் பணம் மற்றும் நகைகளை வாங்கி விட்டார். அவர் பற்றி விசாரித்த போது ஏற்கனவே அவர் ஐந்து பேரை திருமணம் செய்து பணம் மற்றும் நகைகளை வாங்கிய ஏமாற்றியது தெரியவந்தது.

இதே போல கடலூரைச் சேர்ந்த முகம்மது சேட்டு என்பவருடனும் அந்த பெண் சில நாட்கள் மனைவியாக வாழ்ந்து நகை மற்றும் பணத்தை அபேஸ் செய்துள்ளார். சுமார் ஆறு பேரை திருமணம் செய்து ஏமாற்றிய அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.