
சன் டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி சீரியல் ஹீரோயின் நடிகை திவ்யா. இவர் சீரியலில் தனக்கு துணையாக நடித்த நடிகர் அர்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் இரண்டாவது என்பதால் இவர் குறித்து பல சர்ச்சைகள் இருந்தாலும் அர்ணாவிற்காக மதம் மாறி திருமணம் செய்து கொண்டார் திவ்யா. கர்ப்பமாக இருந்தபோது அர்னவ் இன்னொரு பெண்ணோடு தொடர்பில் இருப்பதாக பிரச்சனைகள் எழுந்ததால் தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா சமீபத்தில் தன்னுடைய குழந்தைக்கு விழா நடத்தி சின்னத்திரை பிரபலங்களை அழைத்து பெயர் வைத்துள்ளார். இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த நிலையில் இவர் தன்னுடைய குழந்தையின் பெயர் “பிரயூசி” என்று பெயரிட்டுள்ளாராம். இதை பார்த்து இணையவாசிகள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram