
வேலூர் மாவட்டம் பல்லக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பழனி பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தார்.
அப்போது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மேம்பால சுவற்றின் மீது மோதியது. இதனால் பழனி பாலத்தின் மேலே இருந்து கீழே தவறி விழுந்தார். இந்த விபத்தில் பழனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.