ஊட்டி கொடைக்கானல் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

வாகன கட்டுப்பாட்டால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி தமிழ்நாடு அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவுக்கு நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர். மறு ஆய்வு தொடர்பான மனு ஏப்ரல் 8- ஆம் தேதி விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.