மகாராஷ்டிரா மாநிலம் தானே கோத்பந்தர் சாலையில் அமைந்திருந்த கட்டிடம் ஒன்றின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் மேலும் மூவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது தொடர்பான காணொளி எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ளது.