
சென்னையில் உள்ள மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பேருந்து பயணம் செய்வதற்கு ஜூன் 21 முதல் 31 வரை டோக்கன் வழங்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் உள்ள 42 பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் அடையாள அட்டை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை 42 பணிமனைகளிலும் டோக்கன்கள் வழங்கப்படும். மூத்த குடிமக்கள் தங்களுடைய இருப்பிடச் சான்று, ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்விச் சான்று, 2 வண்ண புகைப்படம் ஆகியவற்றை கொடுத்து அடையாள அட்டை பெறலாம்.