இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைவருக்கு இருந்த அதிகாரங்கள் அனைத்தும் பொதுச் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. இனி மன்சூர் அலிகான் உறுப்பினராக மட்டுமே இருக்க முடியும். அவர் தன்னிச்சையாக செயல்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.