
அமெரிக்க நாட்டில் உள்ள ஒக்லஹாமா மாகாணத்தில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்தில் வீட்டு பாடம் கொடுக்கப்பட்டது. அதில் ஆராய்ச்சி செய்து உரிய விளக்கத்துடன் பதில் வழங்க வேண்டும் என இருந்தது. அதில் கேட்கப்பட்ட கேள்விகளை பார்த்து மாணவர்களின் பெற்றோர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வினாத்தாளை ஒரு பெற்றோர் சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார். அதாவது உலகம் எப்படி உருவானது.? அதனை உருவாக்கியவர் யார்.? தீமை எப்போது தோன்றியது.? அது இப்போதும் இருக்கிறதா.? ஒழுக்கம் என்றால் என்ன.?
மதம் என்றால் என்ன.? கிறிஸ்தவர் என்றால் என்ன.? கிறிஸ்தவராக இருப்பதற்கு அர்த்தம் என்ன?. கடவுள் இருக்காரா.? இல்லையா.? சாத்தான் இருப்பது உண்மையா.? மக்கள் நல்லது அல்லது கெட்டது இதில் எதை ஏற்றுக் கொண்டார்கள். அல்லது இரண்டையும் ஏற்றுக் கொண்டார்களா? என்று மொத்தம் 10 கேள்விகள் இருந்தது. இதை பார்த்த சமூக வலைதளவாசிகள் பள்ளியை மிகவும் விமர்சித்து வந்தனர். மேலும் இதைத் தொடர்ந்து கேள்விகள் பரிசீலனை செய்யப்படும் என பள்ளியின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.