மத்தியப் பிரதேசம் போபால் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது வழுக்கி விழுந்த ஒரு பயணியை, தண்டவாளத்திலன் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ரயில்வே ஊழியர் ஒருவர் தைரியமாக காப்பாற்றிய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த பயணியின் உயிரை காப்பாற்றிய ஊழியரின் செயல் பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

சம்பவம் ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் பகுதியில் நடந்துள்ளது. வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்த ரயில்வே ஊழியர், ரயிலின் சக்கரங்களுக்கு அருகே ஒருவர் விழுந்து கிடப்பதைக் கண்டு, உடனடியாக ஓடி சென்று அவரை பாதுகாப்பான இடத்திற்கு இழுத்துச் சென்றார். இருவரும் பிழைத்தனர். அதிர்ஷ்டவசமாக, பயணிக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை.

 

 

View this post on Instagram

 

A post shared by Bhopal Newz Newz (@bhopal_news__)

இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “பயணிகள் ரயில் முழுமையாக நின்ற பிறகு மட்டுமே ஏற வேண்டும். அவசரமான முயற்சிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்” என்றனர். இச்சம்பவத்தினால் ரயில் சிறிது நேரம் தாமதிக்கப்பட்டது. சம்பவத்தைக் கண்ட மற்ற பயணிகள், உடனடியாக சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பை முதன்மையாக கருதி நடத்திய ரயில்வே ஊழியரின் செயல் பெருமையாகப் போற்றப்படுகிறது.