ஜப்பான் நாட்டின் டோக்கியோ யமகதா மாகாணத்தில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அதன் அருகே வனப்பகுதியும்  உள்ளது. இது உள்நாட்டு விமான நிலையம் என்பதால் இங்கிருந்து தினமும் பல விமானங்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் விமான நிலையத்தின் ஓடுதளத்தின் உள்ளே கடந்த 2  நாட்களுக்கு முன்பு திடீரென கரடி ஒன்று புகுந்துள்ளது. அது ஓடுதளத்திற்குள் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்தது.

இதனால் அந்த விமான நிலையத்தில் இருந்து விமானம் செல்லவோ தரையிறங்கவோ மிகவும் சிரமம் ஏற்பட்டது. இதனால் சுமார் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில் விமான நிலையத்திற்குள் கரடி ஒன்று சுற்றி திரிவதால் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த கரடி மீண்டும் வனபகுதிக்குள் சென்ற பிறகு விமானங்கள் வழக்கம் போல இயக்கப்படும் என தெரிவித்தனர். பின்பு‌ அந்த கரடி விமான நிலையம் அருகே உள்ள வனப் பகுதிக்குள் சென்றது.