படித்தால் வாழ்க்கையில் முன்னேறி சாதிக்கலாம். எனவே ஒழுங்கா காலேஜுக்கு சென்று நன்றாக படி என அட்வைஸ் செய்த ஒரு தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை மாவட்டத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கபாண்டி என்ற 19 வயது மகன் இருக்கிறார். இவர் காலேஜில் படிக்கும் நிலையில் சரிவர கல்லூரிக்கு போகாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக மாரியப்பன் கல்லூரிக்கு போகாமல் வீட்டில் இருந்ததை தந்தை தட்டிக்கேட்டுள்ளார்.

அவர் தன்னுடைய மகனிடம்  படித்தால்தானே முன்னேற முடியும் என கூறியுள்ளார். அதோடு ஒழுங்காக கல்லூரிக்கு சென்று படிக்குமாறு அவர் கண்டித்த நிலையில் ஆத்திரமடைந்த தங்கபாண்டி தன்னுடைய தந்தையை தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தார். இதுகுறித்து மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து தங்கபாண்டியை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது மாணவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.