
இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. அப்படி செல்போன் பயன்படுத்தும் பெரும்பாலான நபர்கள் பல சிம்கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு சிலர் தனித்தனியான ஃபோன்களில் சிம் கார்டுகளை பயன்படுத்தினாலும் அதிகமானோர் ஒரே மொபைல் போனில் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் ஒரே மொபைலில் இரண்டு சிம் கார்டுகள் பயன்படுத்தினால் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சமீபத்தில் செய்தி ஒன்று வெளியானது. இதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பதில் அளித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு தொலைத்தொடர்புத் துறை நிறுவனங்கள் இது போன்ற பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தேசிய எண் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி கேட்டதாகவும் டிராய் தெரிவித்துள்ளது. தொலைத்தொடர்பின் பயன்பாட்டை பாதிக்கும் அனைத்து அம்சங்களையும் மதிப்பிடுவது தான் நோக்கமாக கொண்டுள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கும் சில திட்டங்கள் மற்றும் எதிர்கால தேவைகளுக்கான வளங்களை உறுதி செய்வதே இதன் குறிக்கோளாகும். இந்த நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிம்கார்டு வைத்திருப்பவர்களிடமிருந்து கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்ற தகவல் பொய் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது