2024 -25ம் ஆண்டிற்கான பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் தொடங்கியது. இதில்உறுப்பினர்களின்  கேள்விகளுக்கு பதில் அமைச்சர்களால் அளிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேணுகோபால் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இந்நிலையில்  அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியனின் கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு கொடுத்த பதிலால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய கேள்வி நேரத்தின் போது, ஆலங்குடி எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், தென்காசி திருநெல்வேலி சாலையில் அமைக்கப்பட உள்ள சுங்கச்சாவடி நீக்கப்படுமா என்றார். உலக வங்கி அனுமதித்தால் அது குறித்து யோசிக்கலாம் என அமைச்சர் தெரிவித்தார்.