
திருநெல்வேலி மாநகராட்சி மேயராக திமுக பிஎம் சரவணன் இருந்தார். இவருடைய தலைமையில் ஒவ்வொரு மாதமும் மாநகராட்சி கூட்டங்கள் நடத்துவதில் பிரச்சனைகள் நிலவி வந்தது. இவர் தலைமையில் சமீபத்தில் மாநகராட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அதில் திமுக கவுன்சிலர்களே பலர் கலந்து கொள்ளவில்லை. இதனால் மாநகராட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது பிஎம் சரவணன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அவர் சென்னைக்கு சென்று முதல்வர் ஸ்டாலினிடம் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளாராம். அவர் முதல்வரின் அறிவுறுத்தலின் பேரிலேயே பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோவை திமுக மேயர் கல்பனாவும் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுருவிடம் நேற்று தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். இவர் தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் நேற்று ஒரே நாளில் கோவை மற்றும் நெல்லை மேயர்கள் ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.