
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சிறுமிகள் யமுனை நதியில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் விரைந்து வந்து சிறுமிகளின் சடலங்கலை மீட்டனர்.
https://x.com/SachinGuptaUP/status/1929856771533033708?t=OfS_V1DNl-PP_-TTep7uiQ&s=19
இறந்த சிறுமிகளின் உடல்களை பார்த்து குடும்பத்தினரும் கிராம மக்களும் கதறினர். மேலும் இன்றைய காலகட்டத்தில் ரீல்ஸ் மோகம் என்பது இளைஞர்களின் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் தற்போது அதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு சிறுமிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.