சமூக ஊடகங்களில் ‘விருப்பங்கள்’ (லைக்ஸ்) மற்றும் பின்தொடர்பவர்களை அதிகரிக்க வேண்டும் என்ற போட்டி, இளைஞர்களின் உயிருக்கு ஆபத்தான செயல்களை செய்து வருகிறார்கள். இதன் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தின் கோவர்தன் பகுதியில் நடந்துள்ளது.
கோவர்தன் பகுதியில் சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள உயரமான அரசாங்க விளம்பரத் தூண்களின் மீது ஏறி, சில இளைஞர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி ஆபத்தான சாகசங்களைச் செய்து வருகின்றனர். இந்தச் சம்பவங்களின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி, பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களிடையே கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
#Mathura:
➡️कड़ाके की ठंड व कोहरे में युवाओं का खतरनाक स्टंट, वीडियो वायरल।
➡️गोवर्धन में MVDA पिलरों पर लटकते दिखे युवक।
➡️सोशल मीडिया पर वीडियो डालकर कानून की उड़ाई धज्जियां।
➡️वीडियो के बाद पुलिस जांच में जुटी, युवाओं की तलाश जारी।@mathurapolice @Uppolice #BreakingNews… pic.twitter.com/MI0bZ7zHBD— FM News (@FMNewsLive) December 21, 2025
வைரலான வீடியோக்களில், தரையிலிருந்து பல அடி உயரத்தில் உள்ள இரும்புத் தூண்களில் இளைஞர்கள் தொங்குவதும், தூண்களின் உச்சியில் ஏறி அக்ரோபாட்டிக் அசைவுகளைச் செய்வதும் பதிவாகியுள்ளது. சிறிய தவறு அல்லது சமநிலை இழப்பே உயிருக்கு ஆபத்தாக முடிவடையக்கூடிய நிலையில், இளைஞர்கள் ஆபத்தை அலட்சியமாகப் பார்க்கும் போக்கு கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சாலையோரங்களில் பொதுத் தகவல்கள் மற்றும் அரசு விளம்பரங்களுக்காக நிறுவப்பட்ட இந்தத் தூண்கள், சாகசங்கள் அல்லது உடல் திறன் காட்டும் முயற்சிகளுக்காக அல்ல. பொதுச் சொத்துக்களை இவ்வாறு தவறாகப் பயன்படுத்துவதும், தங்கள் உயிரை ஆபத்துக்கு உள்ளாக்குவதும் சட்ட விதிகளை மீறும் செயலாகும்.
இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற சாகசங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர்வாசிகள் காவல்துறையை வலியுறுத்தியுள்ளனர். சமூக ஊடகங்களில் சில நொடிகள் கிடைக்கும் புகழுக்காக, குடும்பங்களுக்கு வாழ்நாள் முழுவதும் வேதனையை ஏற்படுத்தக்கூடிய செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவது வருத்தமளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இந்த வைரலான வீடியோக்களுக்கு பதிலளித்த மதுரா காவல்துறை, கோவர்தன் காவல் நிலைய பொறுப்பாளருக்கு இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக, சமூக வலைதளம் ‘எக்ஸ்’ (X) இல் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளது.
