சென்னையில் உள்ள வேளச்சேரி பகுதியில் ஒரு வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் அழகு களை நிபுணராக பணிபுரிகிறார். இந்த பெண் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த பிறகு வேளச்சேரி சாலையில் உள்ள ஒரு கடையில் இட்லி மாவு வாங்கிவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் திடீரென அந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அந்த பகுதியில் உள்ள சுமார் 70 சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த நிலையில் வினோத் என்ற 28 வயது வாலிபர் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இவர் சென்னை கிண்டியை சேர்ந்தவர்.

இந்நிலையில் போலீசார் வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதில் வினோத் கார் ஓட்டுனராக இருக்கும் நிலையில் அவரது மனைவி கடந்த ஒரு மாத காலமாக வெளியூருக்கு சென்றுள்ளார்.

தன் மனைவி இல்லாமல் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாமல் வினோத் தவித்தாராம். இதனால்தான் மது போதையில் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். மேலும் அவரை போலீசார் சிறையில் அடைத்துள்ள நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.