அசாம் மாநிலத்தில் நிகழ்ந்த சம்பவம் உலகிற்கே ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது. அங்கு, ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 60 யானைகளின் உயிரை ஏஐ தொழில்நுட்பம் காப்பாற்றியுள்ளது. கவுஹாத்தியிலிருந்து லும்டிங் நகருக்கு சென்ற கம்ரூப் விரைவு ரயில், யானைகள் தண்டவாளத்தை கடக்கும் பகுதியை அடையும் போது, ஏஐ தொழில்நுட்பம் மூலம் ரயில் ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனால், ரயிலை உடனடியாக நிறுத்தியதால், 60 யானைகளின் உயிரை காப்பாற்ற முடிந்தது. இந்த சம்பவம், ஏஐ தொழில்நுட்பத்தின் ஆற்றலை நிரூபித்துள்ளது. இது போன்ற தொழில்நுட்பங்களை வனவிலங்குகளை பாதுகாக்கவும், மனித-விலங்கு மோதல்களைத் தவிர்க்கவும் பயன்படுத்தலாம். இந்த ஏஐ தொழில்நுட்பம் தற்போது கோயம்புத்தூர் அடுத்த மதுக்கரையிலும் பயன்படுத்தப்பட்டு வருவதாக வனத்துறையின் முன்னாள் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.