கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஒரு பெண்ணின் செயல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது அந்த பெண்மணி கார் ஓட்டிக்கொண்டே லேப்டாப் பயன்படுத்தியுள்ளார். அவர் ஒரு கையில் ஸ்டியரிங் மற்றும் மற்றொரு கையில் லேப்டாப் வைத்திருந்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலான நிலையில் அந்த பெண்ணுக்கு போக்குவரத்து காவல்துறையினர் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில் போக்குவரத்து துணை கமிஷனர் வீட்டில் இருந்து வேலை செய்யுங்கள் கார் ஓட்டும்போது வேலை செய்யாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.