பாலிவுட் சினிமா திரையுலகில் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அபிஷேக் பச்சன். இவர் தமிழ் சினிமா பக்கம் அதிகமாக வரவில்லை என்றாலும் இவரது மனைவி ஐஸ்வர்யா ராய் தமிழ் சினிமா திரையுலகில் அவரது நடிப்பில் பல கோடி ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ளார். நீண்ட காலம் காதலித்து வந்த இவர்கள் இருவரும் கடந்து 2007 -ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகளும் இருக்கின்றார்.

இந்நிலையில் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாராயை  திருமணம் செய்வதற்கு முன்பாக பிரபல பாலிவுட் நடிகையான கரிஷ்மா கபூரை காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர்களின் காதல் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் வரை சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அமிதாப்பச்சன் திடீரென இந்த திருமணத்திற்கு சம்மதிக்காததால் இவர்களுடைய காதல் தோல்வியில் முடிந்துள்ளதாம்.  அபிஷேக் பச்சன் முதல் காதல் தோல்வியின் பின்னர் தான் ஐஸ்வர்யா ராயை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.