
சீனாவில் வூ என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய முகத்தை சுற்றி பூச்சி ஒன்று வட்டமிட்டது. இதனால் அவர் அந்த பூச்சியை தட்டிவிட்டுக்கொண்டே இருந்தார். இருப்பினும் தொடர்ந்து அந்த பூச்சி அவரின் முகத்தை வட்டமிட்டது. இதனால் அவர் கன்னத்தின் அருகே பூச்சி வரும்போது கைகளால் அதனை அடித்தார். இதில் அந்த பூச்சி இறந்துவிட்டது. இதனால் வூ நிம்மதி அடைந்த நிலையில் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவருடைய இடது கண் வீக்கமாக காணப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வூ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கண்ணின் நிலைமை மிக மோசமாக இருப்பதாக கூறினார். இதனால் ஆப்ரேஷன் செய்து இடது கண்ணை அகற்றினர். மேலும் அவர் Drain Fly என்ற பூச்சியை அடித்ததாக கூறப்படுகிறது. இது பெரும்பாலும் சாக்கடை இருக்கும் இடங்களில் வசிக்கும் நிலையில் பூச்சியை அடித்ததால் ஏற்பட்ட அலர்ஜி காரணமாக இடது கண் மிகவும் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.