
கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே உள்ள பாபுசபாளைய பகுதியில், ஒரு கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. நகரத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், இந்த சம்பவம் ஏற்பட்டது, மேலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தீயணைப்புத் துறை அதிகாரிகள், கட்டிடம் முழுமையாக இடிந்து விழுந்ததாக தெரிவித்துள்ளனர்.
மீட்பு பணிகள் நடைபெறும் இடத்தில் அச்சம் மற்றும் பதறுதல் நிலவுகிறது, மேலும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் சேர்ந்து மீட்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்கிறார்கள். இந்த கோர சம்பவத்தால் 20 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்பட்டது. அதில் ஒருவர் இறந்து விட்டார். 14 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர். மீதமுள்ளவர்கள் பற்றி இன்னும் தகவல் தெரியவில்லை.
#BREAKING | Video captures moment under construction building comes crashing down in seconds
Tune in for all live updates here – https://t.co/D4n9GELJzp#BengaluruRains #BengaluruNews pic.twitter.com/ChADIr1EZg
— Republic (@republic) October 22, 2024