
ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் அவதார் கிரிஷன் ரெய்னா(81) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற டிஎஸ்பி அதிகாரி. இன்று காலை அவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தூக்க கலக்கத்தில் இருந்தவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவதார் கிரிஷன் ரெய்னா அவரது மகள் பர்கா ரெய்னா (25), பேரன் தகாஷ்(3), உறவினர்களான கங்கா பகத்(17) டேனிஷ் பகத்(15), அத்விக் (6) என மொத்தம் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருக்கு போராடிய அவதார் கிரிஷன் ரெய்னாவின் மனைவி சுவர்ணா, நீது தேவி(40) அருண்குமார்(15) ஆகியோரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.