மத்திய பிரதேச மாநிலத்தில் வரதட்சணை புகார் கொடுத்ததால் ஒரு கணவன் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு கிருஷ்ணகுமார் என்பவருக்கு மீனாட்சி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு மீனாட்சி தன்னுடைய கணவரை பிரிந்த நிலையில் பின்னர் அவர் மீது வரதட்சணை புகார் கொடுத்தார்.

இந்நிலையில் கிருஷ்ணகுமார் தன்னுடைய மாமனார் வீட்டின் அருகே அதாவது தன்னுடைய மனைவியின் வீட்டின் அருகே ஒரு டீக்கடையை திறந்துள்ளார். அந்த கடைக்கு அவர் ஐசிபி 498ஏ என பெயர் வைத்துள்ள நிலையில் கை விலங்கு மாட்டியவாரே டீ வியாபாரம் செய்கிறார்.

அவர் மீது அந்த பிரிவின் கீழ் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால்தான் அந்த பெயரையே தன்னுடைய டீக்கடைக்கு பெயராக வைத்துள்ளார். இது பற்றி கிருஷ்ணகுமார் கூறும் போது, என்னுடைய மனைவி கொடுத்த பொய் புகாரால் என் வாழ்க்கை சீரழிந்து விட்டது. கடந்த மூன்று வருடங்களாக நான் நீதிக்காக அலையும் நிலையில் எனக்கு ஒரு வயதான தாய் இருக்கும் நிலையில் அவருக்காக தான் வாழ்ந்து வருகிறேன் என்றார்.

இது பற்றி அவரது மனைவி மீனாட்சி கூறும் போது, என்னுடைய கணவர் என்னுடைய தந்தையிடம் நிலம் வாங்குவதற்காக பணம் கேட்ட நிலையில் அவர் தர மறுத்து விட்டதால் அதற்காக என்னை அடித்துவிட்டார். அதனால்தான் நான் என்னுடைய தந்தையின் வீட்டிற்கு வந்து விட்டேன். நான் விவாகரத்து வழங்குவதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு முன்பாக அவர் என் பெயரில் வாங்கி அனைத்து கடன்களையும் அடைக்க வேண்டும் என்று கூறினார். மேலும் கணவரின் நூதன போராட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.