கோயம்புத்தூர் மாவட்டம் ரேஸ் கோர்ஸ் சாலையில் முன்னால் துணை நீதிபதிகள் குடியிருப்பு அமைந்துள்ளது. அந்த பகுதியில் 10-கும் மேற்பட்ட சந்தன மரங்கள் உள்ளது. இது குறித்து அறிந்த மர்ம நபர்கள் சிலர் அந்தப் பகுதியை சில நாட்களாக நோட்டமிட்டு வந்தனர்.

கடந்த 12ஆம் தேதி அந்த மர்ம நபர்கள் நீதிபதிகள் குடியிருப்புக்குள் நுழைந்து அங்கிருந்த 5-சந்தன மரங்களை வெட்டியுள்ளனர். பின்பு அதனை எடுத்துச் செல்ல முயற்சித்த போது அதில் ஒரு மரம் மட்டும் பெரிய மரமாக இருந்ததால் அதனை தூக்கிக் செல்ல முடியாமல் அங்கேயே விட்டு சென்றனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த வினோத்குமார் என்பவர் சந்தன மரங்களை கடத்தியது தெரியவந்தது.

இவர் மீது ஏற்கனவே சந்தனமர கடத்தல் தொடர்பாக 6-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. போலீசார் வினோத்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.