உத்தரகண்டின் டேராடூன் நகரில் உள்ள ராய்ப்பூர் பகுதியில் பரபரப்பான சாலையின் நடுவில் ஒரு பெண் அமர்ந்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது. கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப் மற்றும் டெனிம் ஜீன்ஸ் அணிந்த அந்த பெண், சாலையின் நடுவே அமர்ந்து தனது செருப்புகளை சரிசெய்துக் கொண்டிருந்தார்.

வீடியோவில் ஹாரன் சத்தங்களும் இடையூறும் தெளிவாகக் கேட்கின்றன. அந்த பெண்ணின் செயலால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சில வினாடிகள் கழித்து, பாதுகாப்பு காவலர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் சேர்ந்து அந்தப் பெண்ணை சாலையோரம் அழைத்துச் சென்றனர். அவர் குடிபோதையில் இருந்திருக்கக்கூடும் என நெட்டிசன்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதால், சமூகத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், சம்பவம் தொடர்பாக தற்போது வரை போலீசாரிடம் எந்தவொரு புகாரும் அளிக்கப்படவில்லை. அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதா என்பது பற்றிய தகவலும் வெளியாகவில்லை.