
தக் லைஃப்’ திரைப்படம் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. படக்குழு தற்போது சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு என நாடு முழுவதும் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கூறிய கருத்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. கமல்ஹாசன், “தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்தது” என தெரிவித்தார்.
நடிகர் கமலின் பேச்சால் தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தை நாடி உள்ளனர். இந்த நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றம் மொழி குறித்து பேச நீங்கள் என்ன மொழி ஆய்வாளரா இல்லை வரலாற்று ஆய்வாளரா என கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் ஒரு மன்னிப்பு கேட்டிருந்தாலே இந்த பிரச்சனை முடிந்திருக்குமே. பொதுவெளியில் உங்களைப் போன்ற ஒரு பிரபலமான நபர் இப்படி பேசலாமா என கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கமல் மன்னிப்பு கேட்க தயாராக இல்லை எனில் இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியில் ஏன் பாதுகாப்பு கொடுத்து கர்நாடகாவில் தக் லைப் படத்தை வெளியிட வேண்டும்.
மேலும் நீங்கள் உருவாக்கிய பிரச்சனைக்கு போலீஸ்காவல் கேட்டு வியாபாரத்திற்காக வந்துள்ளீர்கள். பிரச்சனையால் பாதிக்கப்படுபவருக்கும், பிரச்சனையை உருவாக்குபவருக்கும் வித்தியாசம் இருக்கிறது.
கமல்ஹாசனுக்கு நீங்கள் அறிவுரை கூறுங்கள். உடைந்த முட்டையை ஒட்ட வைக்க முடியாது என கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி நாங்க பிரசன்னா கமல் தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.