
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உடலுறவு வைத்துவிட்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி கடந்த 2012-ஆம் ஆண்டு புகார் கொடுத்தார். சீமானால் தான் 6 முதல் 7 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சீமான் நாளை காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் எனவும் சம்மன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை நாதகவினர் கிழித்தனர்.
இதனால் சம்மனை கிழித்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளரை சீமான் வீட்டு காவலாளி தாக்கியதால் அவரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். சம்மனை கிழித்தவரையும் போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு வீட்டு காவலாளி போலீசாரை தாக்கியதற்கு சீமானின் மனைவி கயல்விழி மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, என்னை அசிங்கப்படுத்துவதற்காக இப்படி செய்யப்படுகிறது. நான் ஆஜராவேன் என உறுதி செய்யப்பட்ட பிறகும் என் வீட்டில் ஏன் சம்மன் ஓட்ட வேண்டும்? நாளை வர முடியாது. என்ன செய்வீர்கள்? என்னை எதுவும் செய்ய முடியாது என கூறியுள்ளார்.