
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் யாஷிகா ஆனந்த். சினிமாவில் 13 வயதிலேயே நடிக்கும் வாய்ப்பை பெற்ற இவர் 2016 ஆம் ஆண்டு கவலை வேண்டாம் என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தது. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம் மற்றும் தி லெஜெண்ட் என தொடர்ந்து பல படங்களில் யாஷிகா நடித்துள்ளார்.
அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது சில திரைப்படங்களில் கமிட் ஆகி பிசியாக நடித்து வருகின்றார். இப்படியான நிலையில் ரசிகர் ஒருவர் யாஷிகா ஆனந்தின் புகைப்படத்தை நெஞ்சில் பச்சை குத்தியுள்ளார். இதனைப் பார்த்த யாஷிகா, என் புகைப்படத்தை ரசிகர் ஒருவர் நெஞ்சில் பச்சை குத்தியதை பார்த்தேன். இப்படி பச்சை குத்தும் போது அவருக்கு எப்படி வலித்திருக்கும். ஏன் இதுபோன்று செய்கிறீர்கள்? உங்கள் அம்மாவை சந்தோஷப்படுத்துங்கள், அதுதான் எனக்கும் சந்தோஷம் என்று யாஷிகா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.