
நீங்கள் ஏன் சிரிப்பதில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் கேட்ட கேள்விக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் பதில் அளித்துள்ளார். அதில், எனக்கு புரியவில்லை, சில நேரங்களில் சிரிக்காததால் இவர் சீரியஸானவர் எரிச்சலுடன் இருக்கக்கூடியவர், எப்போதும் இறுக்கமான முகத்துடன் இருப்பவர் என்று மக்கள் பேசுகிறார்கள்.
இருந்தாலும் அந்த மக்கள் நான் சிரிப்பதை பார்ப்பதற்காக மைதானத்திற்கு வருவது கிடையாது. அவர்கள் தங்களுடைய அணி வெற்றி பெற வேண்டும் என்பதை பார்ப்பதற்காக தான் வருகிறார்கள். எனவே சிரிப்பை வைத்து என்னால் உதவ முடியாது. உண்மையிலேயே வெற்றி பெற வேண்டும் என்று வெறித்தனமாக இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.