சிவகங்கை மாவட்டம் சோமநாதபுரம் எஸ் ஐ ஆக பணிபுரிந்து வந்தவர் பிரணிதா. அங்கிருந்து சிவகங்கைக்கு அவர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று இரவு ஸ்டேஷனுக்கு ஆவணங்கள் எடுத்து வர சென்றுள்ளார். அப்போது விசிக மாவட்ட செயலாளர் இளைய கௌதமன் உட்பட 10 பேர் கோவில் நிலம் தொடர்பாக அங்கு சென்று பிரணிதாவிடம் தகராறு செய்து அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பான வீடியோவை அதிமுக தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து போலீஸ் ஸ்டேஷனில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது என்று கூறியுள்ளனர். மேலும் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த இளைய கவுதமன் உட்பட 10 பேர் மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் பெண் எஸ்.ஐ திட்டியதோடு அவரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்கியுள்ளனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது அதிமுக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது.

 

சீருடையில் உள்ள பெண் எஸ்.ஐ-யை காவல் நிலையத்திலேயே தாக்கும் தைரியம் எங்கிருந்து வருகிறது?

மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் தான் இன்றைய ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி உள்ளது வெட்கக்கேடு!#பாதுகாப்பில்லா_தமிழ்நாடு pic.twitter.com/iCg9cHrubm

— AIADMK IT WING – Say No To Drugs & DMK (@AIADMKITWINGOFL) February 6, 2025